ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர், மெட்ரோபோலிஸ் இணைந்து "கலாச்சாரம் காக்க ஒரு வரலாற்று கருத்தரங்கு"


மூவாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றையும், கலாச்சாரத்தையும் கொண்ட இந்திய நாட்டின் வளமைகளை இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும், அவற்றை பாராட்டி பாதுகாக்கவும், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர், மெட்ரோபோலிஸ் இணைந்து கலாச்சாரம் காக்க ஒரு வரலாற்று கருத்தரங்கினை நடத்த திட்டமிட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கருத்தரங்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இந்த கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



இந்த ஆண்டு பல்லவர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள் மற்றும் ராண்டிரகூடர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் பற்றிய இரண்டு கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான 400 ஆண்டு கால வரலாறு இதில் இடம்பெறுகிறது.

இந்த கால கட்டத்தில் தென்னிந்தியா முழுவதையும் அண்ட பேரரசுகள், கோவில் கட்டமைப்புகள் மற்றும் நாட்டின் சமுதாய பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளனர். இது பற்றிய கருத்தரங்கு கோவை எஸ்என்ஆர் கல்லூரி கருத்தரங்கில் வரும் மே12 மற்றும் 13ம் தேதிகளில் இரண்டு நாள் கருத்தரங்குகளாக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளன. 13 அமர்வுகளாக நடக்க உள்ள இதில், பல்வேறு கல்வியாளர்கள் பங்கேற்று படத்தொகுப்பு விளக்கங்கள் அளிக்கவுள்ளனர்.

மேலும் டாக்டர் ஆர்.நாகசாமி தலைமை ஏற்கும் இந்த நிகழ்வில், புனேயில் சிறந்த கல்வியாளரான டாக்டர் யு.டெக்லுர்கர், மைசுரிலிருந்து எம்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, விஜயவாடாவிலிருந்து டாக்டர் இ.சிவநாகி ரெட்டி மற்றும் முனைவர் சித்ரா மாதவன், முனைவர் வெங்கட்ராமன், முனைவர் டி.சத்தியமுர்த்தி, பேராசிரியர் சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த கருத்தரங்கில் பொதுமக்களும் பங்கேற்று மகிழ்ச்சியடையலாம். சிறிய அளவிலான தொகை, மதிய உணவுக்கும் செலுத்த வேண்டும். இரண்டு நாள் நடக்கும் இந்த கருத்தரங்கில், மாணவர்கள் தங்களது அடையாள அட்டையுடன் வந்தால் இலவசமாக பங்கேற்கலாம். இந்த நிகழ்வு சீக்சியா அமைப்பின் ஆதரவுடன் நடக்கிறது. இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு 9842251510 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...